தடுப்பு மருந்துகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் செலுத்த வேண்டும் – ஜனக ரத்நாயக்க

0
100

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு வழங்கப்படும் தண்டனை, அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படும், உச்சபட்ச தண்டனையாக இருக்க வேண்டும் என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக, தரம் குறைந்த இம்யுனோ குளோபுளினை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மோசடியில் ஈடுபட்டுள்ளார், படுகொலையில் ஈடுபட்டுள்ளார் எனக் கருத வேண்டும். அமைச்சர், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், மருந்துகளை இறக்குமதி செய்துள்ளதுடன், நாட்டின் அப்பாவி மக்களுக்கு அவற்றை வழங்கியுள்ளார். இதன் காரணமாக, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது எங்களுக்கு தெரியாது. அதனால், இந்த விவகாரம் குறித்து மேலும் ஆராய வேண்டும். இரண்டாம் உலக யுத்தத்தில், ஹிட்லரின் படுகொலைகள் போன்றது இது எனக் கருத வேண்டும். ஹிட்லரும் விச ஊசியை செலுத்தி மக்களை கொன்றார். கெஹெலியவுக்கு வழங்கப்படும் தண்டனை, இலங்கையில் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படும், உச்சபட்ச தண்டனையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. நோய் அறிகுறிகளை பரிசோதிப்பதற்காக, தடுப்பு மருந்துகளை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் செலுத்த வேண்டும். பொதுவாக, அரசியல்வாதிகள், மோசடி ஊழலில் ஈடுபடுவது குறித்து வெட்கப்படுவதில்லை. சிறைக்கு சென்ற பின்னரே, அவர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.’என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.