யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில், தொழில்நுட்ப பீடம், இன்று திறந்து வைக்கப்பட்டது.
பதில் அதிபர் கே.குமரன் தலைமையில், விருந்தினர்கள், பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டு, தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்றப்பட்டன.
அதன் பின்னர், பிரதம விருந்தினராக பங்கேற்ற கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.