மன்னார் வங்காலை கடல் பகுதியில், அரியவகை ஆமை ஒன்றை, உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், வங்காலை கடற்படையினரால், இன்று, மூவர் கைது செய்யப்படுள்ளனர்.
ஆமை, கடலில் பிடிக்கப்பட்டு, இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டுவரப்பட்ட வேளை, படகில் இருந்த மூன்று மீனவர்களையும், கடற்படையினர் கைது செய்து, மன்னார் வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
அத்துடன், ஆமையை பிடிக்க பயன்படுத்திய வலைகள், வெளி இணைப்பு இயந்திரம், இஞ்சின் போன்றவற்றையும், கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.