பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம்

0
246

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக குழு உறுதியளித்துள்ளது.