கோணேஸ்வர ஆலயத்தின் இடைக்கால நிர்வாக சபையை நிறுவுவதற்காக சம்மமத்தைப் பெறுவதற்கான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

0
148

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தின் இடைக்கால நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபையை நிறுவுவதற்காக, சம்பந்தப்பட்டவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு, நீதிமன்றால் இன்று பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் 21.02.2024 அன்று தொடரப்பட்ட வழக்கானது இன்றைய தினம் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைக்கால நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபையை நிறுவுவதற்காக சம்பந்தப்பட்டவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கான அறிவித்தலை பதிவாளர் மூலமாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி சண்முகம் தில்லைராசன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமரநாதன் ஆகியோரினால் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சிவராத்திரி நிகழ்வு மற்றும் நகர்வலத்தின் பின்னர் இடைக்கால நிர்வாக சபையினை நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.