கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை படம் பிடித்த இளைஞர் கைது

0
90

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை படம் பிடித்தபொழுது அனுமதியின்றி ட்ரோன் கமராவை வானில் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் குறித்த இளைஞன், ட்ரோன் கமராவினால் இரணைமடுக் குளத்தைப் படம் பிடித்தவேளை, அங்குள்ள இராணுவ முகாமை படம் பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் பொலிஸாரால் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.