மட்டக்களப்பில் அழகுக்கலை கண்காட்சி நிகழ்வு

0
124

‘தென்றலில்’ எனும் தொனிப்பொருளில் அழகுக்கலை கண்காட்சி நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தினால் மகளீர் தினத்தை முன்னிட்டு, நிகழ்வு இடம்பெற்றதுடன், சாதனை பெண்களாக அழகு கலை பயிற்சியை நிறைவு செய்த பெண்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட அழகுக்கலை சங்க தலைவி வனிதா செல்லப்பெருமாள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் அழகுகலை நிபுணர் பற்றிக் குயின்டா, அழகுகலை துறைசாரி நிபுணர்கள், அழகுகலை பயிற்றுவிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலக சிறுதொழில் அபிவிருத்தி பிரிவின் பயிற்சி மற்றும் வழிகாட்டலுக்கு அமைய, மாவட்டத்தில் செயற்பட்டு வரும் மாவட்ட அழகுக்கலை சங்கம், மாவட்டத்தில் பெண் சிறுதொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், பயிற்றுவிக்கப்பட்ட அழகுக்கலை பயிற்சியாளர்களின் அழகுக்கலையினை காட்சிப்படுத்தும் மணப்பெண் அலங்கார கண்காட்சி நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.