சித்து விலி சித்தம்சித்திர போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கானகௌரவிப்பு நிகழ்வு

0
79

சித்து விலி சித்தம் சித்திர போட்டியில் மாவட்ட ரீதியில் வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.
மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வருடா வருடம் நடாத்தும், சித்து விலி சித்தம் சித்திர போட்டிகளுக்கு அமைவாக,
2022, 2023 ஆம் ஆண்டுகளுக்காக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் வாண்மை நிமித்தம் பங்குபற்றிய போட்டியாளர்கள், சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கௌரவிப்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிரிகாந்த், உளநல ஆலோசனை வைத்திய அதிகாரிகள், மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.