கடனிலிருந்து மீள்வதற்கு சஜித் முன்வைத்த யோசனை!

0
111

இலங்கை கடனிலிருந்து மீள்வதற்கு ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், புத்தளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரத்திலான கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இதன்மூலம் கல்வி அறிவும் திறனும் கொண்ட தலைமுறை உருவாகும்.
இது தேசிய பாதுகாப்பைக் கூட உறுதி செய்யும்.
அத்துடன், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கல்வி குறித்து சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.