வவுனியாவில் மாடுகள் கடத்தல் முறியடிப்பு: 44 மாடுகள் மீட்பு!

0
89

முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல், கொண்டு செல்வதாக கூறி மாடுகளை கடத்திச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வவுனியா பொலிஸ் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீண்டகாலமாக, இந்த மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும், பொலனறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு லொறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலானவை கருவுற்ற பசுக்கள் எனவும், சில மாடுகள் நோய்வாய்ப்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதும் இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கஹட்டகஸ்திகிலிய, இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.