ஜனாதிபதி ரணில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு விஜயம்!

0
62

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான, மட்டக்களப்பு சியோன் தேவாலய புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டார்.

2029 ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு அன்று, தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலய பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார்.

தேவாலய புனரமைப்புப் பணிகள், இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு, பணிப்புரை விடுத்தார்.

அந்த நடவடிக்கைகளுக்கு, இராணுவத்தின் ஆதரவை வழங்குமாறும், இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்தார்.இந்த விஜயத்தில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.