அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் காணி, நிரந்தர வீடு இல்லாது வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு புதியவீடுகள்!

0
82

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் காணி மற்றும் நிரந்தர வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த 5 குடும்பங்களுக்கு காணியுடன் புதிய வீடும் நிர்மாணித்து இன்று
கையளிக்கப்படடது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் 04 மண்டானை கிராமத்தில் வீடு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.ஃ
திருக்கோவில் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைவாக நிதிகள் பெறப்பட்டு, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களுன்னு, புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வீடும் தலா 10இலட்சம் ரூபா பெறுமதியாவை என்பதுடன் காணி இலவசமாக திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகிறது.
இன்றைய வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டார்.
உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஸாந், கிராம நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நிதி வழங்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.