அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச மனித உரிமைக்கள் பாதுகாப்பு மையம் திறப்பு!

0
107

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச மனித உரிமைக்கள் பாதுகாப்பு மையம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைக்கள் பாதுகாப்பு மைய கிளையானது கிழக்கு மாகாணத்தில் திறக்கப்பட்ட மூன்றாவது கிளையாகும். நிகழ்வில், பிரதம அதிதியாக சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் இலங்கைக்கான பிரதான பொதுப்பணிப்பாளர் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் றிஸ்வான் காசீம் கலந்து கொண்டு கிளையினை திறந்து வைத்தார்.

நிகழ்வில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களும் நினைவுப்பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது. திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் இலங்கை தலைமை காரியாலயத்தின் உத்தியோத்தர்கள், ஏனைய பிராந்திய கிளைகளின் பணிப்பாளர்கள், உறுப்பினர், உத்தியோகத்தர்கள், செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.