கிளிநொச்சி – அக்கராயன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் நவீன முறையான
பரசூட் முறையில் மேற்கொள்ளப்பட்ட நெற் பயிர்ச்செய்கையின் அறுவடை இன்று காலை நடைபெற்றது.
அக்கராயன்குளம் பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் விவசாயி ஒருவரின் வயலில் இந்த அறுவடை விழா இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.


இதன்போது விவசாயிகளுக்கும், பிரமுகர்களுக்கும் பரசூட் முறையிலான நெற்செய்கை முறை தொடர்பில் பாடவிதான மற்றும் விவசாயப் போதனாசிரியர்களினால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனை பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தின் பல பகுதிகளில் பரசூட் முறையில் இவ்வாறான முன்மாதிரி நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

