நீதிக்கான பயணம் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் சித்திரக்கண்காட்சி!

0
64

நீதிக்கான பயணம் என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சியில் சித்திரக்கண்காட்சி இடம்பெற்றது. கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று காலை 10.00 மணிக்கு சித்திரக்கண்காட்சி ஆரம்பமானது. இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணத்தில் உருவான சித்;திரங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் வரையப்பட்ட சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெரும்பான்மையின மக்களும் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.