29 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கடவுச்சீட்டு இல்லாததால் மாத்திரம் வரிசை ஏற்படவில்லை என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னால் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இல்வாறு தெரிவித்தார்.

கடவுச்சீட்டு இல்லாததால் மாத்திரம் வரிசை ஏற்படவில்லை. அரசாங்கம் ஒன்லைன் சந்திப்புக்களை முதலில் ஆரம்பித்த நிலையில் சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்தன.

பின்னர் அவை சிலரால் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக அறியக்கிடைத்தது.
இதனை அறிந்து ஒன்லைன் சந்திப்பை உடனே நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். பின்னர் வரிசையில் வரும் படி கூறினோம்.

அப்போது வரிசையிலும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்கப்பட்டுள்ளது. அதன்பின்தான் பொலிஸாருக்கு இதனை பொறுப்பேற்க கூறினோம் என டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles