தேர்தலுக்கு முன் அமெரிக்கா சென்றார் பசில்!

0
73

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று காலை டுபாய்க்கு பயணமாகியுள்ளார். குறித்த தகவலை விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று அதிகாலை 03.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் விமானத்தில் பசில் ராஜபக்ஸ டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.