மக்கள் போராட்ட முன்னணி யாழில், வேட்புமனு தாக்கல்!

0
89

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை மக்கள் போராட்ட முன்னணி இன்று கையளித்தது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மக்கள் போராட்ட முன்னணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.

மக்கள் போராட்ட முன்னணி சார்பாக மார்க்சிச லெனினிசக் கட்சியின் செயலாளர் நாயகம் சி.க.செந்திவேல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மார்க்சிச லெனினிசக் கட்சி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் போராட்ட முன்னணியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் குடைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.