காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழப்பு!

0
93

வவுனியா – ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ரூ.திலீபன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.