காணிப் பிணக்கால் இருவர் உயிரிழப்பு!

0
62

வவுனியா – ஓமந்தையில் காணி பிணக்கால்இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்தது.

வவுனியா – ஓமந்தை – கதிரவேலு பூவரசன் குளத்தை சேர்ந்த 42 வயதான ரூ.திலீபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழந்த நபரும் அவரின் மருமகனும் நேற்றுமுன்தினம் காணியை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் அவர்கள் மீது மிளகாய்த்தூளை வீசிவிட்டு, அவர்களை வாளால் வெட்டியதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய இளங்கோ என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றையவரான திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.