29 C
Colombo
Friday, October 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் மார்பகப் புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வு நடைபவனி!

மார்பகப் புற்றுநோய் தொடர்பில் விழிப்புணரர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக காலை 7.30 க்கு ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியின் நிறைவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தமர்வு ஒன்றும் இடம்பெற்றது. நடைபவனியில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்ஷன், மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.தவரூபன், சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், யாழ். பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles