அரிசி இறக்குமதிக்கு விலைமனு கோரல் ஆரம்பம்

0
37


இந்தியாவிலிருந்து 70, 000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்தார்.

இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும். டிசெம்பர் மாதம் முதல் வாரம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.