வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்!

0
37

வவுனியாவில் கடற்படை அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்று பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பேருந்தில் முகாமுக்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி முகாமுக்கு சென்று கொண்டிருந்த போது நேற்று இரவு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவை சேர்ந்த கடற்படை அதிகாரியே இவ்வாறு உயிரிழந்தார்.

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை, கடற்படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் உயிரிழந்தார்.