
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ. த. குமரன் அறிவித்துள்ளார்.
இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தி அல்லது சைவபரிபாலன சபையால் நடத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பாலபண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது சைவசமய அறிவு அனுட்டானங்களை அனுட்டித்து வரும் 40 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியும்.
சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் கீழ்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் அல்லது இளஞ்சைவப்புலவர் தெரிவு அல்லது சித்தாந்த பண்டிதர் தெரிவு அல்லது பண்டிதர் தெரிவு பரீட்சையில் (ஆரிய திராவிடபாசா விருத்திச்சங்கம்) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவர்கள் விண்ணப்ப படிவத்தை இணையத்தில் பெற்று பரீட்சை கட்டணமாக 1200 ரூபாயை இலங்கை வங்கியில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் கணக்கு இலக்கம் 1133272 இற்கு வைப்பிலிட்டு பற்றுச்சீட்டினை எதிர்வரும் 30.12.2024 இற்கு முன்பாக சைவப்புலவர் சி. கா. கமலநாதன்
தலைவர் அகில இலங்கை சைவப்புலவர் மாசேரி வரணி, யாழ்ப்பாணம். என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
வங்கிப்பற்றுச்சீட்டு விண்ணப்படிவத்துடன் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பிந்திய விண்ணப்பங்கள் மேலதிக அறவீட்டுக்கட்டணம் 300 ரூபாயுடன் 15.01.2025 வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு பிந்திய விண்ணப்பங்கள் ஏதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக விடயங்களை 0777197067, 0779773538, 0776132176 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
பரீட்சைகள் 2025 ஆம் ஆண்டு சித்திரை மாதம் நடைபெறும் என அவர் மேலும் அறிவித்துள்ளார்.