மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் குறித்து கிளிநொச்சி பதில் அரச அதிபருடன் சுவிஸ் தூதரக அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு – குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சிக்கு சென்று பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனுடன் சந்தித்து கலந்துரையாடினர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/12/03-4.jpg)
இந்தச் சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார நிலவரங்கள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/12/01-4-1024x683.jpg)