இந்திய மீனவர்கள் 23 பேர் நிபந்தனையுடன் விடுதலை!மூவருக்கு தலா ரூ. 4 மில்லியன் அபராதம்!!

0
28

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்புக்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில்
நீதிவான் சுபாஸ்கரன் முன்னிலையில் இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த மீனவர்கள் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, வழக்கை ஆராய்ந்த நீதிவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் அபராத தொகையை செலுத்துமாறும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார்.

அபராத தொகையை செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.