திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் காட்டுப்பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் இன்று
மீட்கப்பட்டுள்ளது. யானையின் உடம்பில் சூட்டுக் காயங்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. யானையானது எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னரும் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனவெட்டை காட்டுப்பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.