பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களும் உணர்வுடன் ஒன்று திரண்டு நிகழ்வில் பங்கெடுத்தனர்.