மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க தீர்மானம்!

0
51

மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு தற்போதைய மின்கட்டணத்தை அவ்வாறாகவே பேணுமாறான யோசனையே முன்வைக்கப்பட்டிருந்தது.

மின்கட்டணத்தை நூற்றுக்கு 11 வீதம்வரை குறைக்கும் பரிந்துரையை முன்வைத்திருந்தோம்.

இருப்பினும் முதல் ஆறு மாதங்களுக்கு இவ்வருடத்தில் மின்கட்டணத்தை அவ்வாறாகவே பேண வேண்டும் என்ற யோசனையே மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டது.

இத்தகைய பின்னணியில் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து மக்கள் கருத்தை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இறுதித்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் அனைத்து பிரிவுகளுக்குமான மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.