மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு!

0
8

வவுனியா, புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி, கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.

தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திறகு சென்ற மின்சார வயரின் இணைப்பில், சிக்கிய சிறுமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் புளியங்குளம், பழையவாடி பகுதியைச் சேர்ந்த 06 வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.