திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நில மீட்புக்கான வலையமைப்பின் கலந்துரையாடல்

0
9

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நில மீட்புக்கான வலையமைப்பின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடலை
ஏற்பாடு செய்திருந்தன.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பாகவும், அபகரிப்புக்களை தடுத்தல் மற்றும் இழந்த நிலங்களை மீளப்பெறுதல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.