நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

0
18

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற  உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை (13)  காலை நாடு திரும்பியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியுடன் உலக அரச உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற குழுவினரும் நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 10 ஆம் திகதி மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இங்கிருந்து பயணமாகியிருந்த நிலையில், அவர்கள் இன்று (13) காலை 8.25 மணிக்கு டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.