கிளிநொச்சி – பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம் நள்ளிரவு வீடொன்றின் மீது, இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.