இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
அதேசமயம் இவ் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.