மீனவர்கள் கண்டனப் பேரணி யாழ் நகரில்!

0
26

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த நாட்களில் அதிகளவான இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததைக் கண்டித்தும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரத்தில் உணவு தவிர்ப்பு போராட்டம்,வேலைநிறுத்த போராட்டம் என்பன நடைபெறுகின்றன.

இந்த நிலையில் இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் நகரில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பேரணி யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை சென்றடைந்தது.

இதேவேளை மீனவர்களால் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.