திருகோணமலை மூதூர் வலயக் கல்வி அலுவகப் பிரிவிலுள்ள தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.எம்.றகீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு, அணிநடை, மைதான விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றன.
நிகழ்வில் மூதூர் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஹாபிஸ் மரைக்கார் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார். ஏனைய அதிதிகளாக மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.டபிள்யு.ஜவாத், தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீ.ஏ.ஜப்பார், அயல் பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.