கணேமுல்ல சஞ்சீவ கொலை – சிம் அட்டைகளை வழங்கிய சந்தேக நபர்கள் கைது!

0
30

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மினுவங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவங்கொடையை சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.குற்றத்தைச் செய்யப் பயன்படுத்திய சிம் அட்டைகளை வழங்கி கொலைக்கு உதவியதற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மினுவங்கொட, மெதகொவ்வ பகுதியைச் சேர்ந்த 28 வயதான கங்கொடவில கங்கானம்லகே உதார நிர்மல் குணரத்ன மற்றும் துனகஹா, 31 வயதான மினுவங்கொட வீதியைச் சேர்ந்த செனரத் திசாநாயக்க நளின் துஷ்யந்த ஆவர்.

கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றில் கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 19 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.