அம்பாறை திருக்கோவில் விநாயகபுரத்தில், சமகால அரசியல் கலந்துரையாடல்
இடம்பெற்றது. கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்துகொண்டார்.
அரசியல் மற்றும் கலாசார விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.