கடற்றொழில் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தீரும் – ரவிகரன் எம்.பி!

0
34

கடற்றொழில் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குழு நிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைத் தடுப்பதற்கு முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.