கொழும்பு மாநகர சபையின் புதிய முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்கமானது.
இதன்போது வாதப் பிரதிவாங்கள் இடம்பெற்ற நிலையில் மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று மேயர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த முதல்வர் வேட்பாளராக வ்ராய் கெலீ பல்தசார் முன்னிறுத்தப்பட்டார்.இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் முதல்வர் வேட்பாளராக ரிசா சரூக் முன்னிறுத்தப்பட்டார்.வாக்கெடுப்பின் முடிவில் 61 வாக்குகளை பெற்ற கொழும்பு மாநகர சபையின் முதல்வராக வ்ராய் கெலீ பல்தசார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ரிசா சரூக் 54 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.