மேலும் 1,030 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்

0
463

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று (11) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 128,530 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களில் 827 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.