அடுத்து கண்டி, குருநாகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம்

0
355

மேல் மாகாணத்தைத் தொடர்ந்து கண்டி, குருநாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கொவிட் -19 தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.