நாட்டில் தற்போதைய நிலையில் 08 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவக்கூடிய அதிக ஆபத்தான நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று தொடர்பாக நாட்டின் அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது கொரோனா தொற்றானது ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
அத்தோடு எதிர்வரும் வார நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.