அம்பாறையில் பொதுமக்கள் பயன்பாட்டு கொட்டகை திறப்பு

0
265

வெசாக் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் பிரதேச செயலகத்தின் நிதிப்பங்களிப்புடன் கணக்காளரின் ஒத்துழைப்போடு பாரம்பரிய முறையில் இயற்கை பொருட்களை கொண்டு நிர்மானிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டு கொட்டகை திறந்து வைக்கப்பட்டது.

தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் கலந்து கொண்டு பொதுமக்கள் பாவனை கொட்டகையை திறந்து வைத்தார்.

நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி, நிர்வாக உத்தியோகத்தர் க.சோபிதா, சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.