மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமீன்மடு பொதுச்சுகாதார பிரிவில் 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பொதுச்சுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும், 102 பேருக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் தலைமையில் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
