மேலும் ஒரு கர்ப்பணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் 7 கர்ப்பணி பெண்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.