பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த விதம் தொடர்பில் சரியான விசாரணை நடத்துமாறு மனு!

0
405

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த விதம் தொடர்பில் சரியான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே மற்றும் மீனவர் குழு ஒன்றினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் ஊடாக பாரிய அளவில் சுற்றுச் சூழல் மாசடைந்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.