மட்டக்களப்பு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இன்று சனிக்கிழமை 126 பேருக்குபி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் தொற்றாளர்கள் இணங் காணப்பட்ட நிலையில் பி.சி.ஆர்.மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது கொரோனா தொற்றாளர்களுடன் முதல் தொற்றுடைய உறவினர்கள் தொற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இவ் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீராவோடையில் -58 பேருக்கும் ஓட்மாவடியில் -27 பேருக்கும் ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் 41 பேருக்கும் இவ் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.