மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

0
469

கிழக்கு மாகாணத்திற்கு 75,000 சினோபார்ம் தடுப்பூசிகள் சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கொவிட் – 19 எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன இதற்கமைய, சுகாதார அமைச்சின் முன்னுரிமைக்கு அமைய குறித்த மூன்று மாவட்டங்களுக்கும் தலா 25,000 சினோபாரமா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் முன்னுரிமைக்கு ஏற்ப 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதியோர் இல்லங்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள், தொழிற்சாலைகளில் தொழில்புரிபவர்கள் மற்றும் 30 – 60 வயதுக்கு இடைப்பட்ட பொதுமக்கள் என 6 பிரிவினருக்கு இந்த தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சினோபாரமா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முதல் கட்டமாக பிரதேச செயலகம் ,மாவட்ட செயலகம் , மாநகர சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் என வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு , இன்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.