கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சற்றுமுன்னர் பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையிலும் இடம்பெறும் என பிரசவ விசேட வைத்தியர்கள் நிலையத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.